Posts

Showing posts from June, 2022

Kannadasan 95

Image
  கண்ணதாசன் 95 செந்தமிழ் தேன் மொழியால் பாட்டும் நீயே பாவமும் நீயே பாடிய உன்னையே பாட வந்தேனே !!!   விசுவின் இசையும் தேவனின் (மகா ) மெட்டும் மனதில் பதியும் உன் துள்ளல் பாட்டாலே   நச்சுண்ட ஈசனும் நடிக நாத்திகர் மத்தியிலே நடமாட வைத்தானே   ஓடும் ரயிலின் இருப்பு பாதையில் கழக போதையில் தலை வைக்க வைத்தானே   ஓடா ரயிலும் தண்டவாள தலையும் வண்டவாளம் அனைத்தையும் இசைப்பட சொன்னானே   பட்டினத்தாரையும் பகவத் கீதையும் பாமர இசையில் படம்பிடித்து சொன்னானே   நாட்டின் கோட்டையிலே நிதி சேர்க்கும் வேட்கையிலே அடுக்கு மொழி பேசிய அற்பர்கள் மத்தியிலே   நாட்டுக்கோட்டையிலே நல்லறத்தை காட்டிடவே பாட்டுக்கோட்டையிலே பிறவியை புட்டு வைத்தவனே   வைரத்திற்கும் முத்திற்கும் பட்டம் தேடும் தலையிருக்கும் சிறிஞர்கள் மத்தியிலே கிடைக்காத அறிய முத்தையா தமிழின் சொத்து அய்யா !!   உனக்கு பிறகு அனைத்தும் பணத்திற்கும் பதவிக்கும் பட்டத்திற்கும் பகட்டிற்கும் பாட்டு எழுதும் பல்லிளிக்கும் சொத்தைய...

The prince sat under a Tree

Image
  ராகம் : மதுவந்தி   ( கண்ட நாள் முதலாய் சாயலில் ) 1.   அரச மரத்தினடி அமர்ந்த அரசனடி  அடிமுடிகாணா அரிய ஜோதியை காண  (அரச மரத்தினடி ) 2. ஆ ல மரத்தினடி அமர்ந்த தென் திசை முனிவனடி சனகாதியருக்கு உரைக்காமல் உணர்த்திய  ( ஆல மரத்தினடி ) கல் ஆலமரத்தினடி குருவினடி 3. அ சுரனும் மாமரமாய் ஆனதினால் மலைக்குருவும் அவனை தன் சின்னமாய் ஏற்றானடி 4. அ ம்புகள் எய்து அனுதினம் கொன்றவனும் வன்னி மரத்தினடி அமர்ந்ததினால் வான்மீகி ஆனானடி   5. ம ரம் போல் விரிய மனமும் விழைய தான் மட்டும் வாழாமல் பல் உயிர் ஓம்பும் மரம் போல் வாழ (அரச மரத்தினடி )   6. அ ரண்மனை துறந்து காட்டிலே வாழ்ந்ததால் அரசனும் அவதாரம் ஆனான் மரவுரி தரித்ததால் மறை போற்றும் பெரும் ஆள் ஆனான் பெருமாள் ஆனான். (அரச மரத்தினடி ) களக்காட்டு கவிராயர் கிருஷ்ண குமார் விளக்கம் : 1. அரச குமாரன் சித்தார்த்தன் ஒரு அரச மரத்தடியில் தன் சந்தித்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு அதனை சிந்தித்து ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்த போது எளிதில் யாராலும் காண முடியாத அருட் பெருஞ் ஜோதியை தன் உள்ளில் கண்ட நொடி அவன் அந்த மரத்தின்...

இராமாயணம் பிறந்த இடம்

Image
                   இராமாயணம் பிறந்த இடம் 17.3.2020                                                           ராகம் : ஹிந்தோளம் வா ருங்கள் வான்மீகியூருக்கு வாருங்கள்  திரு வான்மீகியுருக்கு வாருங்கள் ஈ சனை காண வாருங்கள் மருந்தீசனை காண வாருங்கள் ஈசன் ஈசன் ஈசன் மருந்தீசன் ரா ம ராம ராம ராமா ராம ராம ராம ராமா என்றே சதா ஜபிக்கும் சதா சிவனை காண வாருங்கள்  3 ந ச்சுண்ட  ந மசிவாயனும் நா வினிக்க  ந வின்ற  நா மம்       4 (ராம ராம ராம ராமா ) ரா ம நாதத்தின் ரூபம் காணவே நாரதனை பணித்தனன் நாத சொரூபன் ரா மாயணம் படைக்க வேடனின் வேதனை  தணிக்க வன்னிகாட்டில்  தன்னை மறக்க மரா மரா என்று உருவேத்தினன் அயன் மகன்         2 பு றத்தீ கூட்டும் வன்னி அகத்தீ ஏற்றும் வன்னி அகத்தியரும் சிவமாய் கண்ட வன்னி வன்னி நீ மரமா மரமா மரமா ம ராம ரா ம என்னும் சத...

மண் புழுவே உழவனடி

Image
                         அடி தேடி போனேனடி ( முதலாம் ஏப்ரல் 2020 - வெள்ளிக் கிழங்கு தோண்டி எடுத்த போது உதித்த அடிக ள் )                                               பாடலின் இராகம் : சண்முக ப்ரியா  அடி தேடி போனேனடி அண்ணன் அடி தேடி போனேனடி (2) மலையினடி இருப்பதாக சொன்னானடி தேடி தேடி களைத்த ஆதி திருவரங்கன் அயர்ந்ததாக சொன்னானடி (1*)  சக்கரத்ததாழ்வாரும் போற்றும் மாதவனும் காணாததடி நம்மாழ்வார் அடிப்பொடி மா தவம் செய்யாமல் கண்டேணடி ( 2*) அருணகிரிக்கு அடி எடுத்து கொடுத்த ஆனை மணாளனும் (தேவ) வள்ளிக் கிழங்காக அடி காட்டிக் கொடுத்தானடி (3*) பத்தவதாரம் கண்டவனும் காணாததடி வெண் தாடிக் காரன் காண்பித்தானடி களக்காட்டில் சத்திய வாக்கு எடுத்தானடி உண்மையை ஊருக்கு உரக்க உறைப்பேன் உரைக்க உறைப்பேன் என்றானடி (4*) உழவனடி தொழவேண்டுமடி உலகம் உய்விக்க மூவடி எடுத்தானடி மாடுகள் மேய்த்தானடி சாணத்தை உரமாக்க புழுவாகவும் அவதாரம் எடுத்தானட...