Posts

நானும் கவிஞன் தான் I am also a Poet

Image
  நா.முத்துக்குமார் பாடல்களை தொ. கா. வில் பலர் வகை தொகையில்லாமல் பாடிக் கொண்டிருந்ததை பார்த்தேன் கேட்டேன் நாமும் குமார் தானே பாட போகலாமா தமிழை நான்  பாட  வேண்டாமா  என்று தயங்கினேன் நம் பெயரில்  "முத்து"இல்லையே  என்று மயங்கினேன் " முத்து குளிக்க வாரீகளா  மூச்சை அடக்க வாரீகளா "  "முத்தை"யாவின்** பாடல் வரிகள் வரவேற்றது முத்தெடுக்க தூத்துக்குடி "தான்" போக வேண்டுமா ? எட்டய புரத்தில் தான் பிறக்க வேண்டுமா ? யுக பாரதி உண்டு பழனி பாரதி உண்டு  யுகத்துக்கே ஒரு பாரதி தான் உண்டு எவரேனும் சொல்லிடுவர் என்ற அச்சமுண்டு  இன்று கடையேனும்  கவிதை எழுத வழி உண்டோ ? என்றே மலைத்தேன் கடையத்து காரிகையை  கரம் பிடித்து அக்னி வலம் வந்து அகத்து காரி ஆக்கியவன்  கரம் பிடித்து கவிதை வயலில் உழ சொல்லி  தருவானோ தமிழ்பதத்தை திருநெல்வேலிகாரன் என்று தமிழ் அல்வா கிண்ட விடுவானோ தமிழ் வரவில்லை என்றால் அருவா தீட்டி வருவானோ  வாஞ்சி மணியாச்சி வந்ததும் சுட்டு சாம்பலாக்கி விடுவானோ  திருவல்லிக்கேணியில்  நீ பிறந்ததால் நான் இறந்தேன் என்று  யானையால்...

அவள் அவன் ஆட்டம் ஆலங்காடு She He dance in Banyan forest

Image
  அந்த ஆலங்காட்டு திருச்சபையில் அவள் ஆடுகின்றாள்  நடுநிசியில் களி மிகு நடனத்தை  கண்டுவிட்டு கங்காதரனும் களம் புகுந்தான்  அன்னையின் ஆட்டத்தை கண்டதுமே      அந்த பாரதியும்        மகா கவியானான்    சிவனின் ஆட்டத்தை  கண்டிடவே தலை காலாய்  அவன் அம்மை வந்தாள்  தரையில் விழுந்த தோட்டினையே காலால் செவியில் மாட்டிக் கொண்டான் ஆடிய பாதம் நிற்கவில்லை நின்றால் இங்கே இயக்கமில்லை  அடங்கா பிள்ளையின் ஆட்டத்தினால் மாங்கனி தாயும் பேயானாள்  ஆலங்காட்டு சடையன் அவன் விரித்த விழுதால்    மரமானேன் நான் கண்ட காட்சி மறக்கவில்லை நானே சாட்சி உறக்கமில்லை  களக்காட்டு கவிராயர் டிசம்பர் 2025

தாமதம் ஏன் கண்ணா ? Why the Delay krishna ?

Image
  தாமதம் ஏன் கண்ணா ? ( Why the Delay Krishna ? ) உனை பாடுவோருக்கு அருள் செய்ய  காக்கை சிறகினிலே  உன்னையே கண்டு திக்கு தெரியாத காட்டில் தேடி தேடி அலைந்து பார்த்த சாரதியை பார்த்த பாரதியை நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிந்ததேனோ  ஏனோ ? ஏனோ? ஏனோ? நாத்திக சிகாமணியை உன் தாசன் ஆக்கிய கண்ணா ஆயர்பாடி மாளிகையில் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே  விஸ்வ நாதன்இசையில் பாட வைத்து உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்று எழுதி  வஞ்சகன் கண்ணன்  என்று பாட வைத்தது ஏனோ ? ஏனோ? ஏனோ? ஊத்துக்காடு கண்ட  தரிசனமே காண அலைபாயுதே கண்ணா என்று பாடிய மகராஜனின் சந்தானத்தை புறம் எங்கும்  கான மூர்த்தே என்று நின்னை  பாடி ரசிகரை பரவசமாய்  பார்த்தனுக்கு தேர் ஓட்டிய நீ பாடகனுக்கு கார் ஓட்ட  மறந்தது ஏனோ ஏனோ ஏனோ ? உன் பெயர் வைத்தும் கோபால கிருஷ்ண பாரதியார் உன் ஆடலை பாடாமல் போன அந்த பாரதி யார் கோபாலா கிருஷ்ணா  ஆடும் சிதம்பரமே  தில்லை வன காட்டில் எப்போ வருவாரோ எந்தன் கலி தீர்க்க என்று உன்னை பாடாமல் போனது இதனால் தானோ  தானோ தானோ??  தாமதம் ஏ...