Posts

Merry Chrishna

Image
  கிருஷ்து  கருத்த சிறுவனின் கருத்து அவனை கவர்ந்ததால் யோசுவா கிருத்தவன் ஆனான் மூங்கில் குழலால் மயக்கும் வண்டிசை மலர்ந்த மனங்கள் மறைந்த பகைகள் விரிந்த கைகள் யுத்த கீதை ( கேட்டே ) வியந்த சிந்தை இதுவே எந்தை ( என்றது ) யூத குழந்தை யாதுமாகி நின்ற யாதவனும் சூதறியா சூசையனும் மாரியிடத்தில் மாறியவனும் மேரியில் உதித்தவனும் அனைத்திலும் மாய கண்ணனடா அறைந்தாலும் காட்டுவது மறு கன்னமடா விரிவடைய விரும்பும் மனமெல்லாம் வானம் பொழியும் மழையெல்லாம் இணைக்கும் நம்மையெல்லாம். ஜெருசேலத்தில் பிறந்த ஜோஷுவாவிற்கு அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு பெருக்கெடுத்தது. அனைத்து உயிர்களையும் இணைக்கும் அந்த அன்பு என்னும் உள்ளம் மலர்ச்சியை உணர கிருஷ்ணனின் அன்பு தத்துவம் கவர்ந்து அவரை சிந்து நதியின் கீழ் பகுதிக்கு அழைத்து வந்தது. “கிருஷ்ண” என்னும் அன்பின் மகிமையில் தோய்ந்த அந்த மகா யோகி தான் உணர்ந்ததை தன் மக்களும் உணர அந்த தத்துவத்தை தன் ஹிப்ரூ மொழியில் “கிருஷ்து” என்றழைக்க. சிந்து நாகரீகத்தை தன் மொழியில் விளக்க , அதன் பின் அனைத்து உயிர்களிடத்தும் அன்புக் காட்டிய அந்த இளைஞன் “...

No stains on You Gopala

Image
  குறையொன்றுமில்லை கோபாலா !!  ராஜ கோபாலா !!!  வெளுத்தபாலே விஷமான பின்னாலே ! உளுத்ததெல்லாம் அரசியல் பேசும் முன்னாலே ! வெளுத்த உப்பை எடுத்தாய் நின் கையாலே ! (  https://en.wikipedia.org/wiki/Vedaranyam_March   ) வெள்ளையன் சட்டத்தை வெளுத்தெல்லாம் நின் வாயாலே ! விடமாட்டேன் என்றவனை தட்டிவிட்டாய் மதியாலே தொடாதவரை கூட்டிச் சென்றாய் மலை மேலே ( https://hindutemplefacts.wordpress.com/tag/kurai-ondrum-illai/ ) காந்தியையும் கண்டித்தாய் மனசாட்சி போலே பாரதியை உயர்த்திவிட்டாய் அகக்காட்சியாலே   ஈரோட்டு ஆசாமி தறிகெட்டு பேசிடினும் முறைகெட்டு போன பின்பும் ராம  சாமியை வசைபாட சென்றிடுனும்  நட்பால் நல்பண்பு காத்த மரமே ! முதிர்ந்த நெல்லிகனிபோல் உன் மூதுரைகள் முன்னே கசந்திடினும் என்றென்றும் தித்தித்த சேலத்து மாம்பழமே   நேருவிற்கு நேர் எதிரே நேர்வழி காட்டிடவே சுதந்திராவை கண்டெடுத்தாய் இந்திராவை கண்டவுடன் கழகத்தையும் ஆதரித்தாய்   வீண்பழிக்கு ஆளாகி வெட்டிபேச்சுக்கு இரையாகி சுட்டிபேசுவோர் கதையாகி நின்றாலும் நிற்காமல் கொட்டும் மழையிலும் குடி கெடுக்கும் குடி தடு...

Demon to Tree to Peacock

Image
  அசுரன் மரமானதால் மயிலாகினான் பாரதத்தில் பல தெய்வங்களின் திருவிளையாடல்கள் பற்றி பல புராணங்கள் விவரிக்கின்றன. அது தீபாவளி பண்டிகை என்றால் அதில் நரகாசுரன் என்ற அரக்கனை அவனை தாய் பூமா தேவியின் அவதாரமான சத்ய பாமா கொல்வதால் கொண்டாடப்படுவது என்றும் , விஜய தசமி என்றால் அதில் இராமன் இராவணனை கொன்றான் அல்லது துர்க்கை அரக்கனை கொன்றதால் கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.  ஆனால் திருசெந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி - இன்று ( 9 நவ 2021) சுக்ல பக்ஷ சஷ்டி ( அமாவாசை முடிந்ததில் இருந்து ஆறாவது நாள் ) ஒரு சிறப்பு அம்சத்தை கொண்டுள்ளது. காசியப முனிவரின் மகனான சூரபத்மன், தன் தவ வலிமையினால் அடைந்த தவ சித்துகளை பிற உயிர்களுக்கு தீங்கிழைக்க பயன்படுத்தியதால் அனைத்து உயிரினங்களும் முருக பெருமானிடம் வேண்டுகோள் விடுத்தன.  அதன் பொருட்டு போர் களத்திற்கு வந்த முருகனை அசுர படைகள் பல விதங்களில் எதிர்கின்றன. அனைத்து அசுரர்களும் முருகனின் பேராற்றலால் மடிந்து போகிறார்கள். ஆனால் அரக்கர்களின் தலைவன் கடைசியாக போருக்கு வரும் போது தன் மாய சக்தியால் பல உருவங்களை எடுக்கிறார்.  போர் கடுமையாக ந...

Bharathi 100 Mahakavi Day

Image
பாரதி 100 நீ பிறந்தாலும் இறந்தாலும் புரட்சி தான்   ஜாதிகள் இல்லையடி என்ற உன்னையும் பார்ப்பனனாக பார்த்தனன் குறுங்கிய வட்டத்தில் சுருக்க பார்த்தனர் கறுத்த இதயத்தினர் இருந்தும் ஒன்பது பதினொன்று அமெரிக்கனுக்கு வலித்தாலும் தமிழனுக்கு இனிக்க நீ துர்கை யை என்றும் வணங்கியதாலா தமிழை கனிமொழி யாக வடித்ததாலா நீ என்றும் இறை அன்போடு வாழ்ந்ததாலா மகாகவி நாளில் நல் விடியல்   எட்டயபுரத்தானை எட்டியது யானை எட்டும் புகழ் வானை   களக்காட்டு கவிராயர் 11.செப்.2021  

காந்தஹார் கனியும் நாள்

Image
https://www.latimes.com/world-nation/story/2021-08-20/afghanistan-taliban-takeover-friday-prayers   லாஹிலாஹா   இல்லல்லா முஹம்மது   ரசூலுல்லா எல்லை   இல்லா   பரம்   பொருளே அல்லா   அல்லா எங்கும்   நிறை   பொருளே அல்லா   அல்லா   கரூரும்   கராச்சியும்   ஒன்றே என்றுணர்த்திய   சதாசிவனும் அவனை   போற்றும்   மும்தாஜ்   அலி   கானும்     1 இசையால்   இணைந்திடும் ரஹ்மானும்   ராஜாவும் ஏவுகணை   ஏவிய   எங்கள் கலாமையும்   இசையால் இளக்கிய   இளங்காளியே இலாஹியே   அல்லா   அல்லா     2 அன்று   காந்தாரி   மணந்தது கண்ணில்லா   குருடன் இன்று   அங்கிருப்பதோ கண்ணிருக்கும்   முரடன்    3 அராபிய   மரங்களை   வெட்டி எண்ணையே   கண்டனன் உன்னை   மட்டும்   காணவில்லை உரக்க   கூவினன் அண்டமே   பிண்டமான   ஆதி   திருமூலமே பிறை   மட்டும்   கண்டு   உன்னை   துதிப்போரும் பிறையோடு   கூ...