Merry Chrishna
கிருஷ்து கருத்த சிறுவனின் கருத்து அவனை கவர்ந்ததால் யோசுவா கிருத்தவன் ஆனான் மூங்கில் குழலால் மயக்கும் வண்டிசை மலர்ந்த மனங்கள் மறைந்த பகைகள் விரிந்த கைகள் யுத்த கீதை ( கேட்டே ) வியந்த சிந்தை இதுவே எந்தை ( என்றது ) யூத குழந்தை யாதுமாகி நின்ற யாதவனும் சூதறியா சூசையனும் மாரியிடத்தில் மாறியவனும் மேரியில் உதித்தவனும் அனைத்திலும் மாய கண்ணனடா அறைந்தாலும் காட்டுவது மறு கன்னமடா விரிவடைய விரும்பும் மனமெல்லாம் வானம் பொழியும் மழையெல்லாம் இணைக்கும் நம்மையெல்லாம். ஜெருசேலத்தில் பிறந்த ஜோஷுவாவிற்கு அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு பெருக்கெடுத்தது. அனைத்து உயிர்களையும் இணைக்கும் அந்த அன்பு என்னும் உள்ளம் மலர்ச்சியை உணர கிருஷ்ணனின் அன்பு தத்துவம் கவர்ந்து அவரை சிந்து நதியின் கீழ் பகுதிக்கு அழைத்து வந்தது. “கிருஷ்ண” என்னும் அன்பின் மகிமையில் தோய்ந்த அந்த மகா யோகி தான் உணர்ந்ததை தன் மக்களும் உணர அந்த தத்துவத்தை தன் ஹிப்ரூ மொழியில் “கிருஷ்து” என்றழைக்க. சிந்து நாகரீகத்தை தன் மொழியில் விளக்க , அதன் பின் அனைத்து உயிர்களிடத்தும் அன்புக் காட்டிய அந்த இளைஞன் “...