தாமதம் ஏன் கண்ணா ? Why the Delay krishna ?
(Why the Delay Krishna ? )
உனை பாடுவோருக்கு
அருள் செய்ய
காக்கை சிறகினிலே
உன்னையே கண்டு
திக்கு தெரியாத காட்டில்
தேடி தேடி அலைந்து
பார்த்த சாரதியை
பார்த்த பாரதியை
நல்லதோர் வீணை
செய்தே அதை நலம்கெட புழுதியில்
எறிந்ததேனோ
ஏனோ ?
ஏனோ? ஏனோ?
நாத்திக சிகாமணியை
உன் தாசன் ஆக்கிய கண்ணா
ஆயர்பாடி மாளிகையில்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
விஸ்வ நாதன்இசையில் பாட வைத்து
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காது என்று எழுதி
வஞ்சகன் கண்ணன்
என்று பாட வைத்தது ஏனோ ?
ஏனோ? ஏனோ?
ஊத்துக்காடு கண்ட
தரிசனமே காண
அலைபாயுதே கண்ணா
என்று பாடிய மகராஜனின்
சந்தானத்தை புறம் எங்கும்
கான மூர்த்தே என்று நின்னை
பாடி ரசிகரை பரவசமாய்
பார்த்தனுக்கு தேர் ஓட்டிய நீ
பாடகனுக்கு கார் ஓட்ட
மறந்தது ஏனோ ஏனோ ஏனோ ?
உன் பெயர் வைத்தும்
| கோபால கிருஷ்ண பாரதியார் |
போன அந்த பாரதி யார்
கோபாலா கிருஷ்ணா
ஆடும் சிதம்பரமே
தில்லை வன காட்டில்
எப்போ வருவாரோ
எந்தன் கலி தீர்க்க
என்று உன்னை பாடாமல்
போனது இதனால் தானோ
தானோ தானோ??
தாமதம் ஏன் கண்ணா ?
உனை பாடுவோருக்கு
அருள் செய்ய
உன் பெயர் தாங்கிய
கருத்த சிறுவனும்
காத்திருக்கின்றான்
கவி தையில் பாட
மார்கழியில்
துயிலெழுவாய்
நாராயணா
வைகுந்த
ஏகாதசியில்
களக்காட்டு கவிராயர்
30 டிசம்பர் 2025
15 மார்கழி விசுவாவசு
( பின் குறிப்பு : இந்த பாடல் ஹிந்தோளம் ராகத்தில் பாடி ஆலாபனை செய்ய கூடிய அளவிற்கு பாட வேண்டும் என்பது கவியின் விருப்பம் )

Comments
Post a Comment