Kannadasan 95
கண்ணதாசன் 95 செந்தமிழ் தேன் மொழியால் பாட்டும் நீயே பாவமும் நீயே பாடிய உன்னையே பாட வந்தேனே !!! விசுவின் இசையும் தேவனின் (மகா ) மெட்டும் மனதில் பதியும் உன் துள்ளல் பாட்டாலே நச்சுண்ட ஈசனும் நடிக நாத்திகர் மத்தியிலே நடமாட வைத்தானே ஓடும் ரயிலின் இருப்பு பாதையில் கழக போதையில் தலை வைக்க வைத்தானே ஓடா ரயிலும் தண்டவாள தலையும் வண்டவாளம் அனைத்தையும் இசைப்பட சொன்னானே பட்டினத்தாரையும் பகவத் கீதையும் பாமர இசையில் படம்பிடித்து சொன்னானே நாட்டின் கோட்டையிலே நிதி சேர்க்கும் வேட்கையிலே அடுக்கு மொழி பேசிய அற்பர்கள் மத்தியிலே நாட்டுக்கோட்டையிலே நல்லறத்தை காட்டிடவே பாட்டுக்கோட்டையிலே பிறவியை புட்டு வைத்தவனே வைரத்திற்கும் முத்திற்கும் பட்டம் தேடும் தலையிருக்கும் சிறிஞர்கள் மத்தியிலே கிடைக்காத அறிய முத்தையா தமிழின் சொத்து அய்யா !! உனக்கு பிறகு அனைத்தும் பணத்திற்கும் பதவிக்கும் பட்டத்திற்கும் பகட்டிற்கும் பாட்டு எழுதும் பல்லிளிக்கும் சொத்தைய...