கரும்பு புல்லாங்குழல் Sugarcane Flute
கரும்பினால் ஆன புல்லாங்குழல்
கரும்பு வனத்தில்
கருத்த சிறுவன்
ஒருவன்
கார்மேகம்
சூழும் நிலையில்
கவின் மிகு
காட்டுக்குள்ளே
மாதுளை பூவுக்குள்
முயங்கிய
வண்டொன்று விர்ரென்று வந்து
விஸ்வத்தின்
நாதத்தை வாயால்
அவன் தலையை
சுற்றி வணங்கி
மாலை இட்ட
மங்கை போல்
அவன் காதில்
மெல்லிசையிட்டது
கம்பன் விட்ட
இடத்தில்
கரும்பனை பாட
சொன்னது
மாதுளையில்
எத்தனை முத்தைய்யா
நாட்டரசன்
கோட்டையில் நல்மாதின்
புதல்வன் அவன்
பட்டுக்கோட்டை
விட்ட கோட்டை
பாட்டுக் கோட்டை
ஆக்கிடவே
கரும்பிலே
துளையிடவே
வண்டிற்கு
ஆணையிட்டான்
கரும்பில்
ஒரு புல்லாங்குழல்
அவன் வாசிக்க
வாசிக்க
அவனை சுவாசிக்க
சுவாசிக்க
பார் எங்கும்
பாட்டு பித்தர்கள்
கண்ணனின் தாசனுக்கும்
தாசனானார்கள்
திருமூலைரையும் பொய்யாக்கினான்
கண்டதை விண்டான்
மெய் மொழி
புலவன்
அவனும் இராமன்
தான்
“வனவாசம்”
கண்டான்
செந்தமிழ்
தேன்மொழியால்
உள்ளத்தில்
நல்ல உள்ளம்
உறங்காது என்பதை
இன்று என்
மூலமாகவும்
வெளிவந்தான்
விஸ்வநாதன்.
களக்காட்டு
கவிராயர்
24 ஜூன்
2025
கண்ணதாசன்
– எம் எஸ் விஸ்வநாதனின் நினைவாக
ஒரு கவிஞனும் இசை அமைப்பாளனும் இரண்டற கலக்க முடியுமா ?
கண்ணதாசனும் விஸ்வநாதனும் இரு உருவங்கள் அல்ல அந்த ஊண் உடம்பு என்னும் ஆலயத்தில் இணைந்துவிட்ட ஒரே ஆன்மா. அதனாலேயே அவர்களால் காலத்தால் அழியாத காவிய பாடல்களை படைக்க வந்த இயற்கையின் உன்னத படைப்பு.
வேறெந்த மொழியிலும் ஏன் தமிழ் மொழியில் கூட இன்னொரு இதே போல் ஈருடல் ஒர் உயிர் பாடல் சங்கமத்தை இது வரை உருவாக்க முடிந்ததில்லை. அதனால் இயறகையும் அவர்களை ஒரே நாளில் படைத்தும் விட்டது.

.jpg)
Comments
Post a Comment